டிசாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான பகவதி சரண் பாணி கிரஹி 1908 பிப்.1 அன்று பூரி மாவட்டத்தில் பிறந்தார். இவர் இலக்கிய வாதி, அரசியல் ஆர்வலர், புரட்சியாளர், சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகை யாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டவர்.
வசதியான குடும்பத்தில் பிறந்த போதிலும், கிராமப்புறங்களில் இருந்த கடும் வறுமையும், துயரமும் அவர் மனதில் அழியாத வடுவை ஏற்படுத்தியது. பாட்னா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்த பின்பு, பூரியில் இடைக்காலக் கைதியாக இருந்த புகழ்பெற்ற புரட்சியாளர் சத்யன் குஹா வுடன் நட்பு கிடைத்தது. இந்த நட்பு, அவருக்கு இடது சித்தாந்தம் மற்றும் புரட்சிகர சிந்தனைகளை வளர்க்க உத்வேகம் அளித்தது.
பகவதி மற்ற இடதுசாரி சித்தாந்தவாதிகளுடன் இணைந்து காலனித்துவ ஆட்சியை எதிர்க்கும் ஒரு குழுவை உருவாக்கினார். சுதந்திரப் போராட்டம் தவிர, நிலவுடைமை வர்க்கம், கந்து வட்டிக்காரர்களின் அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களிலும், ஜமீன்தாரி முறையை ஒழிப்பதிலும் முக்கியப் பங்காற்றினார். கம்யூனிச சித்தாந்தம் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் ‘க்ருஷக்’ பத்திரிகையின் ஆசிரியராகவும் ருந்தார் பகவதி. 2 ஆம் உலகப் போரின் போது, ஆங்கிலேய அரசாங்கம் யாருடனும் கலந்தாலோசிக்காமல், இந்தியாவை போரில் ஈடுபடச் செய்ய முயன்றது. இதற்கு கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டனர். இதற்கு பகவதி உள்ளிட்ட பல தலைவர்கள் கட்டாக்கில் உள்ள சோப்பு தொழிற்சாலை ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது ஆங்கிலேய அரசு, பகவதி மீது பொய் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது. 1942 இல் விடுதலையான பகவதி, 1943 அக்.23 அன்று தனது 35-வது வயதில் காலமானார்.இன்று தோழர் பகவதி சரண் பாணிகிரஹி நினைவு தினம்